ஞாயிறு, 16 மார்ச், 2014

நீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து

நீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து



வெந்தையம் – 50 கி
கருஞ்சீரகம் – 25 கி
ஓமம் – 25 கி
சீரகம் – 25 கி

இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
(வறுத்தபின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).
தினமும் காலை சிறிய ஸ்பூன் -ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து
வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால்
மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).
ஒரு வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் சோதித்து
பார்த்துக் கொள்ளவும்.

வேறு நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை
பெற்ற பின் செய்யவும்.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புக்களை கரைக்க உதவும் சிறந்த வழிகள்

அதிகமான கொழுப்பு உடம்பில் சேர்ந்துவிட்டதா? இதை குறைப்பதற்கான வழிகளை மேற்கொண்டுள்ளீர்களா?


இதனுடன் சேர்த்து உணவையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இந்த பகுதியில் பார்ப்போம். கொழுப்பை கரைக்கும் செயலில் உதவும் உணவுகள் கடைகளில் எளிதாக கிடைக்கின்றன. ஆனால் மற்றவர்கள் சொல்வதை கேட்டு அதே முறையை பின்பற்றினால் உங்களுக்கும் அதே வகையில் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களின் கொழுப்பு குறைவதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தாலும், அவர்களுக்கு சில நேரங்களில் தெரியாமல் போய்விடும்.

மேலும் அவர்கள் அதற்கு தவறான ஒரு காரணத்தை நினைத்துக் கொண்டு, அதையும் உங்களுக்கு கூற வாய்ப்புகள் அதிகம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்கள் எடையை குறைக்க உதவும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.


ஓட்ஸ்


முதல் படியாக உடல் எடையை குறைக்க உதவுவது ஓட்ஸ். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஒரு கப் ஓட்ஸை காலை உணவாக சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் கலந்த பயிர் வகைகளை காலை உணவாக சாப்பிடலாம். மேலும் அத்துடன் வாழைப்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரிகளை சேர்த்துக் கொள்ளலாம். ஓட்ஸ் இரண்டு கிராமாக இருந்தால் பழங்களை சேர்த்தால் கூடுதல் அரை கிராம் ஆகிவிடும். தற்போதைய அறிவியல் கணிப்புகளின் படி ஏறத்தாழ ஒரு நாளைக்கு 15 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்தை சாப்பிட வேண்டும் என்றும், குறிப்பாக அதில் 10 முதல் 15 கிராம் கரையும் நார்ச்சத்து இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது.

பார்லி மற்றும் முழு தானிய வகைகள்


பார்லி மற்றும் இதர தானிய வகைகள் இதய நோயிலிருந்து நம்மை காக்க வல்லதாய் இருக்கின்றன. ஏனெனில் இதில் அதிக அளவு கரையும் நார்ச்சத்து உள்ளது.


பீன்ஸ்


கரையும் நார்ச்சத்து நிறைந்த காய்கறி பீன்ஸ் ஆகும். இதை உண்டால் செரிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். இதனால் தான் உடலை குறைக்க விரும்புபவர்கள் பீன்ஸை சாப்பிடுகின்றனர். கிட்னி பீன்ஸ் வகையிலிருந்து நேவி பீன்ஸ், பிளாக் ஐட், கார்பான்சோஸ், அவரை, பட்டாணி ஆகிய பல வகையான பீன்ஸ்களும் உள்ளன. இதை தயாரிப்பதற்கும் பல வழிகள் உள்ளன.

வெண்டைக்காய் மற்றும் கத்தரிக்காய்


இவை இரண்டும் குறைந்த கலோரிகளை கொண்டவையாகும். இதில் அதிக அளவு கரையும் நார்சத்து உள்ளது.


வால்நட்ஸ்

இந்த பருப்புக்களை உண்பது இதய நோயை கட்டுப்படுத்தும். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு அவுன்ஸ் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பை குறைக்க முடியும். இதில் உள்ள மற்ற 7 சதவிகித பருப்பு வகைகளில் உள்ள ஆரோக்கியமூட்டும் பொருட்கள் இதயத்தை பாதுகாக்கின்றன.

வெஜிடேபிள் எண்ணெய்


சூரியகாந்தி, கனோலா மற்றும் பல எண்ணெய்களையும், வெண்ணெய் மற்றும் பன்றி கொழுப்பால் செய்யும் எண்ணெய்களை தவிர்த்தோ அல்லது குறைத்து சாப்பிடுவதும், உடலின் குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புகளை குறைக்கின்றன.

திராட்சை, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளிப்பு பழங்கள்


இப்பழ வகைகளில் உள்ள பெக்டின் என்ற பொருள் கரையக் கூடிய நார்ச்சத்தை கொண்டுள்ளது. இவை கொழுப்பை கரைக்க உதவுகின்றன.


ஸ்டாநோல்ஸ் மற்றும் ஸ்டீரால்ஸ் உள்ள உணவு வகைகள்


மரத்தின் பசையிலிருந்து எடுக்கப்படும் ஸ்டனோல்ஸ் மற்றும் ஸ்டெரொல்ஸ் ஆகியவை உடலில் உள்ள கொழுப்புகளை உறிஞ்சிக் கொள்கின்றன. இவற்றை சாக்லெட்டுகள், வெண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள், கிரானோலா பார்ஸ் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு ஆகிய உணவு பொருட்களிலும் கலப்பதுண்டு. ஒரு நாளைக்கு இரண்டு கிராம் தவிர ஸ்டாநோல்ஸ் உண்டால், அது நமது குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புகளை 12 சதவிகிதம் குறைக்க உதவுகிறது.

சோயா


சோயா மற்றும் இதை மூலப்பொருளாக பயன்படுத்தி செய்யப்பட்ட சோயா பால், டோஃபு ஆகிய உணவுகள் உடல் எடையை குறைக்க ஏற்ற மிகவும் உறுதியான வழியாக உள்ளன. அதிலும் ஒரு நாளைக்கு 27 கிராம் சோயா சாப்பிடுவதன் மூலம் 6 முதல் 9 சதவிகிதம் குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புகளை கரைக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


கொழுப்பு நிறைந்த மீன் வகைகள்


ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மீன் சாப்பிடுவது கொழுப்பை குறைக்க உதவுகின்றன. ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா-3 குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இது இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளை குறைத்து இதயத்தை காக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இதயத் துடிப்பை சீராக்கின்றது.

சனி, 18 ஜனவரி, 2014

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

Post image for சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?
 உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.
‘கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.
சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன.
சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும்.
கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.(நன்றி இணையம்)
இந்த கல்லினால் நான் ரொம்பவே அவஸ்தை பட்டுட்டேன்.... இதற்க்கு சரியான தீர்வு நல்ல மருந்து (black seed oil )கருஞ்சீரகம் எண்ணை தான்... சின்ன ஸ்பூன் கருஞ்சீரகம் ஆயில், அரைகிளாஸ் .சுடு தண்ணீரில் கலந்து   காலைல வெறும் வைத்தில்  சாப்பிடணும்.. இன்ஷா அல்லாஹ் குணம் ஆகிடும்....   

சனி, 11 ஜனவரி, 2014

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்  திரு நாமாதால் ஆரம்பம் செய்கிறேன்...


அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்மதுல்லாஹி வா பரக்காத்துகு